என்னுடன் அதிகப் படங்களில், 27 படங்களில், நடித்தவர் ஸ்ரீதேவி. அது ஒரு இனிமையான நினைவு. நானும் அவரும் காதலிப்பதாக ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என்றே எல்லாரும் நம்பினார்கள். ஸ்ரீதேவியின் தாயார் கூட அப்படித்தான்
நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் அப்படியெல்லாம் நடக்கவில்லை. அதையெல்லாம் தாண்டிய அற்புதமான உறவு எங்களுக்குள் இருந்தது.
அப்போதெல்லாம் என்னைப் பார்த்தால் ஸ்ரீதேவி பயத்துடன் ஒதுங்கி நிற்பார். அந்த பயம் இப்போதும் அவரிடம் உள்ளது. என்னை இப்போதும் கமல் சார் என்றுதான் அவர் அழைப்பார்…”, என்று கூறியுள்ளார் கமல்.
மலையாளப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி