சிம்பு தனது பெயரை எஸ்டிஆர் என சுருக்கியுள்ளார்.

தனது ரசிகர்களும் இதே பெயரிலேயே இனிமேல் தன்னை அழைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்தப் பெயர் சுருக்கம் வந்ததற்கு ஒரு தனிக் கதையே இருக்கிறது. சிம்பு தற்போது நடித்து வரும் வானம் படத்தின் லண்டன் ஷூட்டிங்குக்காக விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார் சிம்பு. அப்போது விசா விண்ணப்பத்தில் அவரது முதல் பெயர், நடுப் பெயர் உள்ளட்டவற்றை எழுதுமாறு கூறியிருந்தனர்.
இதையடுத்து இனிஷயலின் விரிவாக்கத்துடன் சிலம்பரசன் தேசிங்கு ராஜேந்திரன் என்று எழுதியிருந்தார் சிம்பு. இதைப் பார்த்த விண்ணப்ப அதிகாரி (அவருக்கு தமிழ் தெரியுமாம்) உங்களது பெயரைப் பார்த்தால் எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். போலவே தெரிகிறதே. பேசாமல் எஸ்டிஆர் என உங்களது பெயரை மாற்றிக்கொள்ளலாமே எனக் கூறினாராம்.
எம்ஜிஆரும், என்டிஆரும் எத்தனையோ சாதனைகளைச் செய்தவர்கள். அவர்களுடன் தன்னை ஒப்பிட்டு அந்த அதிகாரி பேசியதால் மகிழ்ச்சி அடைந்த சிம்பு, இந்தப் பெயரிலேயே இனி எல்லோரும் அழைக்கட்டும் என விருப்பம் தெரிவித்துள்ளாராம்.
இதை விட முக்கியமான ஒரு மேட்டர் உள்ளது. விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்குப் பிறகு சிம்புவின் இமேஜ் பல மடங்கு உயர்ந்துள்ளதாம். குறிப்பாக சமூக சேவை நிறுவனங்கள் பலவும் சிம்புவை அணுகி வருகின்றனவாம்.