பாதிரியாரின் பாலியல் விளையாட்டால் பள்ளி மாணவி கொலை

 கேரளாவில் விடுதியில் தங்கி படித்து வந்த பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கொன்றது தொடர்பாக பாதிரியார் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் போற்றுக்கல் என்ற இடத்தில் மாணவியர் விடுதி உள்ளது. இங்கு கண்ணூர் மாவட்டம் கேளகம் பகுதியை சேர்ந்த அனு (16) என்ற மாணவி தங்கியிருந்து, அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.கடந்த ஆண்டு அக்டோபரில் விடுதியில் அனு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பற்றி போற்றுக்கல் போலீசார் விசாரித்தபோது, அனு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக விடுதி நிர்வாகிகள் கூறினர். ஆனால், அனு கொலை செய்யப்பட்டதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர். இந்த வழக்கை உள்ளூர் போலீசார் சரியாக விசாரிக்கவில்லை என்று குற்றம்சாட்டிய அவர்கள், போராட்டம் நடத்தினர். இதையடுத்து, வழக்கு குற்றப் பிரிவு புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது.

இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையிலான தனிப்படை நடத்திய விசாரணையில், அனு பலாத்காரம் செய்யப்பட்டதும், உணவில் எலி விஷம் கலந்து கொடுத்து அவர் கொல்லப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, பத்தனாபுரம் பகுதியை சேர்ந்த பாதிரியர் ஜோசப் என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். கோழிக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.