குற்றத்தை ஒப்புக் கொண்டார் பாதிரியார்

10 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற தமிழக பாதிரியார் இத்தாலியில் கைது… குற்றத்தை ஒப்புக் கொண்டார்!

ரோம்: 10 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் இத்தாலியில் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அந்நாட்டு சட்டப்பட்டி அவருக்கு 14 வருட சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக அவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் டேவிட். 1987ம் ஆண்டு பாதிரியாராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் இத்தாலிக்கு வந்து அங்கு செயல்படத் தொடங்கினார். ரோம் நகரில் பாதிரியாராக உள்ளார். 40 வயதான இவர் ரோம் அருகே உள்ள டெரமா என்ற நகரில் வசித்து வருகிறார்.
இவர் 10 வயது சிறுமியை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்தது அம்பலமானது.
கடந்த ஆண்டு டிசம்பர் 19ம் தேதி டேவிட்டின் பெற்றோர் வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நிலையில், அப்பகுதியில் உள்ள 10 வயது சிறுமி, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி டேவிட் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு சான்டா கிளாஸ் பொம்மையைப் பரிசாக அளித்த டேவிட், அச்சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவரிடமிருந்து மீண்டு வந்த சிறுமி தனது பெற்றோரிடம் இதைத் தெரிவிக்கவே அவர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து டேவிட் கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து உடனடியாக டேவிட் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சிறையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த டேவிட்,
வெளியில் வந்த பிறகு, தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டுள்ளார்.
இதையடுத்து விரைவில் அவர் மீதான வழக்கின் விசாரணை தொடங்கவுள்ளது. அவருக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என டேவிட்டின் வக்கீல் ஜியோவன்னி ஜெபியா கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெபியா கூறுகையில், டெரமா நகரில் உள்ள தனது வீட்டில் டேவிட் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அங்குள்ள கான்வென்ட்டில் வார இறுதி பிரார்த்தனையில் அவர் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. தற்போது தனது வீட்டில் பிரார்த்தனை செய்து கழித்து வருகிறார் டேவிட், என்றார் ஜெபியா.
அவர் மீதான சட்டப்பூர்வ விசாரணை விரைவில் தொடங்கவுள்ளது.
ஏற்கெனவே ஒரு தமிழ்ப் பாதிரியார் பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில் அமெரிக்காவில் கைதாகியிருப்பது குறிப்பிடக்கத்து. இவர்களைத் தவிர ஜெர்மனி, அயர்லாந்து, அமெரிக்காவைச் சேர்ந்த சில பாதிரியார்கள் மீதும் சிறுவர்களை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டு உள்ளது. இவற்றை வாடிகன் தலைமைப் பீடமும் ஒப்புக் கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பாதிரியார்கள் பற்றி அந்தந்த பகுதி போலீஸ் நிலையத்திலேயே புகார் செய்யலாம் என்று போப் 16-ம் பெனடிக்ட் அறிவித்துள்ளது.