கிளி விடு தூது

                                        
பல்லவி

சொல்ல வல்லாயோ?-கிளியே!
சொல்லநீ வல்லாயோ?-
அனுபல்லவி

வல்ல வேல்முரு கன்தனை-இங்கு
வந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று
(சொல்ல)
சரணங்கள்
1.
தில்லை யம்பலத்தே-நடனம்
      செய்யும் அமரர்பிரான்-அவன்
செல்வத் திருமகனை இங்கு வந்து
      சேர்ந்து கலந்து மகிழ்ந்திடு வாயென்று
(சொல்ல)
2.
அல்லிக் குளத்தருகே-ஒரு நாள்
      அந்திப் பொழுதினிலே-அங்கோர்
முல்லைச் செடியதன்ப்ற்-செய்த வினை
      முற்றும் மறந்திடக் கற்றதென் னேயென்று
(சொல்ல)
3.
பாலை வனத்திடைடே-தனைக் கைப்
      பற்றி நடக்கையிலே-தன் கை
வேலின் மிசையாணை-வைத்துச் சொன்ன
      விந்தை மொழிகளைச் சிந்தைசெய் வாயென்று
(சொல்ல)