பல்லவி | ||
சொல்ல வல்லாயோ?-கிளியே! சொல்லநீ வல்லாயோ?- | ||
அனுபல்லவி | ||
வல்ல வேல்முரு கன்தனை-இங்கு வந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று | (சொல்ல) | |
சரணங்கள் | ||
1. | தில்லை யம்பலத்தே-நடனம் செய்யும் அமரர்பிரான்-அவன் செல்வத் திருமகனை இங்கு வந்து சேர்ந்து கலந்து மகிழ்ந்திடு வாயென்று | (சொல்ல) |
2. | அல்லிக் குளத்தருகே-ஒரு நாள் அந்திப் பொழுதினிலே-அங்கோர் முல்லைச் செடியதன்ப்ற்-செய்த வினை முற்றும் மறந்திடக் கற்றதென் னேயென்று | (சொல்ல) |
3. | பாலை வனத்திடைடே-தனைக் கைப் பற்றி நடக்கையிலே-தன் கை வேலின் மிசையாணை-வைத்துச் சொன்ன விந்தை மொழிகளைச் சிந்தைசெய் வாயென்று | (சொல்ல) |