எய்ட்ஸ் பரப்பியவருக்கு 45 ஆண்டு ஜெயில்

                            எய்ட்ஸ் பரப்பியவருக்கு 45 ஆண்டு ஜெயில்


அமெரிக்காவில் காளன் கவுண்டி பகுதியை சேர்ந்தவர் பிலிப். 53 வயதாகும் இவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 2005-ம் ஆண்டு இது பற்றி அவருக்கு தெரிய வந்தது. எய்ட்ஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த அவர் மனநலம் சற்று பாதிக்கப் பட்டிருந்தார். வேண்டும் என்றே பெண்களிடம் உறவு கொண்டு எய்ட்ஸ் நோயை பரப்பினார்.6 பெண்களிடம் அவர் உறவு கொண்டார். இதனால் அந்த 6 பெண்களுக்கும் எய்ட்ஸ் நோய் தாக்கியது. பிலிப்பின் இந்த திட்டமிட்ட செய்கை பற்றி போலீசாருக்கு தெரிய வந்தது. அவர்கள் பிலிப்பை கைது செய்து காளின் கவுண்டி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதி பிலிப்புக்கு 45 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.