வைகுண்டத்தில் திருமாலுக்கு இடையறாது தொண்டு செய்பவர்கள் நித்ய சூரிகள் என்றழைக்கப்படுவர். இதில் திருமாலுக்கு வாகனமாக அமைந்தவர் கருடன். இவர் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர். பறவை இனங்களின் ராஜாவாகக் கருதப் படுபவர் என்பதால் பட்சிராஜன் என்றும் அழைக்கப்படுபவர். இவரின் தாயார் வினதையின் பெயரை முன்னிட்டு இவரை வைனதேயன் என்றும் அழைப்பர். இவரை திருமாலின் பெரிய திருவடி என்றும் போற்றுவர்.
வேதமே வடிவான இவரின் கைங்கரியத்தை மெச்சி, திருமால் இவரைத் தனது வாகனமாகவும்
கொடியாகவும் ஏற்றுக் கொண்டார். ஆழ்வார்களில் பெரியாழ்வார் கருடனின் அம்சமாக அவதரித்தார். கஜேந்திர மோட்ச வைபவத்தில், பகவான் கருடனை விட்டுவிட்டு, அவசரமாக கஜேந்திரன் என்ற யானை யைக் காப்பாற்றப் புறப்பட்டபோது, கருடன் தாமாகக் கிளம்பி திருமாலின் அவசரத்திற்கு ஏற்ப நடந்து கொண்டார். முதலையால் கவ்வப்பட்ட அந்த யானை "ஆதிமூலமே' என்று அலறியது. தாம் செல்வதற்குள் யானைக்கு ஏதாவது தீங்கு நேரிடக்கூடாதே என்று தன் சக்ராயுதத்தை திருமால் ஏவிட, சக்ராயுதம் முதலையின் தலையை அறுத்து யானையைக் காப்பாற்றி யது. தன் பக்தனின் கஷ்டங்களைத் தீர்க்க பகவான் எந்த அளவிற்கு முயற்சி எடுக்கிறான் என்பதை இந்த கஜேந்திரன் கதையிலிருந்து அறியலாம்.வேதமே வடிவான இவரின் கைங்கரியத்தை மெச்சி, திருமால் இவரைத் தனது வாகனமாகவும்
பகவானின் காக்கும் தன்மையைப் பாராட்டும் பட்டர் என்ற மஹனீயர், "பெருமாளே! நீ உன் பக்தனைக் காப்பதில் பெருமையில்லை. அதில் நீ காட்டிய வேகம் தான் மிகவும் போற்றுதலுக்குரியது' என்று புகழ்கிறார். கஜேந்திர மோட்ச வைபவம் எல்லா திருமால் திருத் தலங்களிலும் ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. அன்று பெருமான் கருட சேவையில் வீதியுலா வருவார்.
கஜேந்திர மோட்ச வைபவம் பல தலங்களில் தலவரலாறு சம்பந்தப்பட்டதாக இருந்தபோதும், குறிப்பிட்ட சில தலங்களை- அதாவது திருமோகூர், திருஅட்டபுயகரம், கபிஸ்தலம் ஆகிய தலங்களைக் குறிப்பிடலாம்.
திரு அட்டபுயகரத்தில் கருடாரூடனாக ஒரு திவ்யமங்கள விக்ரஹம் இதற்குச் சான்றாய் அமைந்துள்ளதைக் காணலாம்.
திருவல்லிக்கேணியில் வரதராஜப் பெருமாள் மூலவர் கருட சேவையில் காட்சியளிக்கிறார். மற்றும் சோளிங்கரில் தக்கான் குளக்கரையிலும் கருடாரூட னாக கஜேந்திர வரதராஜப் பெருமாளைத் தரிசிக்க லாம்.
ஆடி மாதப் பௌர்ணமியில் கஜேந்திர மோட்ச வைபவம் அநேகமாக அனைத்து திருமால் திருத்தலங் களிலும் கொண்டாடப்படுகிறது.
நன்றி நக்கீரன்