
உயிர்களைவிட்டுக் கணநேரமும் பிரியாமை அவனது குறிப்பு என மாணிக்கவாசகர் அனுபவித்துக் கூறுகின்றார். ‘உய்ய என் (உயிர்களின்) உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா’, ‘மருவி எவ்வுயிரும் வளர்ப்போன் காண்க’ என்பன போலத் திருவாசகத்தின் பல இடங்களில் இறைவன் உயிர்களோடு கலந்து நின்று பிரியாமல் இருப்பதன் திருக்குறிப்பை அதாவது ‘கடவுளின் பணித்திட்டத்தை’ மணிவாசகர் அறிந்து கூறுகின்றார்.
கடவுளின் இந்த திட்டத்தை ஒருவன் அறியாமல் இருப்பதற்குக் காரணம் அவனது வினையே என்றும், அதுவே கடவுளின் திட்டத்தை அவனுக்கு மறைக்கின்றதென்றும் மாணிக்கவாசகர் கூறுகின்றார்.
“வினையென் போலுடை யார்பிறரார்
உடை யானடி நாயேனைத் தினையின் பாகமும் பிறிவது
திருக்குறிப் பன்று”
(திருவாசகம் 41)