மத்தியப் பிரதேச மாநிலம் பாத்நகர் என்ற இடத்தில் உள்ள ஆசிரமம் ஒன்றில் மாயா என்ற அந்தப் பெண் வாழ்ந்து வருகிறார்.
இவர் நாகலோகத்தைச் சேர்ந்தவர் என்றும், அவ்வப்போது பாம்பு உருவெடுத்து நாகலோகம் சென்று தனது 3 சகோதரிகளையும் பார்த்துவிட்டு வருவதாகவும் கூறுகிறார்.
சிறு வயதில் இருந்தே தனக்கு திருமணமாகிவிட்டது என்ற எண்ணம் மனதில் இருந்து வருவதாகவும், விரைவில் எனது கணவன் திரும்பி வந்து தன்னுடன் சேருவார் என்றும் இவள் நம்புகிறாள்.
இந்த பூமியில் பிறந்து தனது குடும்பத்தாரின் மீதான அன்பினால் தனது கணவர் அவரது சக்திகளை இழந்து விட்டதாகவும் மாயா கூறுகிறார்.
|
ஆனால் சில பிரச்சினைகளின் காரணமாக நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போய்விட்டது. அதனால் நான் தற்கொலை செய்து கொண்டேன். அன்றைய தினத்தில் இருந்து நான் என் காதலனைத் தேடிக் கொண்டிருக்கிறேன் என்கிறார்.
நாகலோகம், ம்ரித்யுலோகம் (இப்பூமி) என்பது பற்றி அசாதாரண விஷயங்களை எல்லாம் இந்த மாயா கூறுகிறார். இதைப் பற்றி அறிந்த நாள் முதல் அந்த ஊர் மக்கள் மாயாவை மா பகவதி என்று வணங்க ஆரம்பித்துவிட்டனர்.