ராகம்-தன்யாசி | ||
பல்லவி | ||
எத்தனை கோடி இன்பம் வைத்தாய்?-எங்கள் இறைவா!இறைவா!இறைவா! | (ஓ-எத்தனை) | |
சரணங்கள் | ||
சித்தினை அசித்தடன் இணைத்தாய்-அங்கு சேரும் ஐம் பூதத்து வியனுல கமைத்தாய். அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய மாகப் பலபலநல் லழகுகள் சமைத்தாய். | (ஓ-எத்தனை) | |
முக்தியென் றொருநிலை சமைத்தாய்-அங்கு முழுதினையு முணரும் உணர் வ்மைத்தாய் பக்தியென் றொருநிலை வகுத்தாய்-எங்கள் பரமா!பரமா!பரமா! | (ஓ-எத்தனை |