பல்லவி | ||
எந்த நேரமும்நின் மையல் ஏறுதடீ! குற வள்ளீ!சிறு வள்ளீ! | ||
சரணங்கள் | ||
(இந்த)நேரத்தி லேமலை வாரத்தி லேநதி யோரத்தி லேயுனைக் கூடி-நின்றன் வீரத் தமிழ்ச்சொல்லின் சாரத்தி லேமனம் மிக்க மகிழ்ச்சிகொண் டாடி-குழல் பாரத்தி லேஇத ழீரத்தி லேமுலை யோரத்திலே அன்பு சூடி-நெஞ்சம் ஆரத் தழுவி அமரநிலை பெற்று அதன்பயனை யின்று காண்பேன். | எந்தநேரமும்) | |
வெள்ளை நிலாவிங்கு வானத்தை மூடி விரிந்து பொழிவது கண்டாய்-ஒளிக் கொள்ளை யிலேயுனைக் கூடி முயங்கிக் குறிப்பினி லேயொன்று பட்டு-நின்தன் பிள்ளைக் கிளிமென் குதலையி லேமனம் பின்ன மறச்செல்ல விட்டு அடி தெள்ளி ஞானப் பெருஞ்செல்வ மே!நினைச் சேர விரும்பினன்,கண்டாய்! | (எந்தநேரமும்) | |
வட்டங்க ளிட்டுக் குளமக லாத மணிப்பெருந் தெப்பத்தைப் போலே-நினை விட்டு விட்டுப்பல லீலைகள் செய்துநின் மேனி தனைவிட லின்றி-அடி எட்டுத் திசையும் ஒளிர்ந்திடுங் காலை யிரவினைப் போன்ற முகத்தாய்! முத்தம் இட்டுப் பலமுத்த மிட்டுப் பலமுத்தம் இட்டுனைச் சேர்ந்திட வந்தேன். (எந்தநேரமும்) |
2 வள்ளிப் பாட்டு
ராகம்-கரஹரப்பிரியை | தாளம்-ஆதி | |
பல்லவி | ||
உனையே மையல் கொண்டேன், வள்ளீ! உவமையில் அரியாய்,உயிரினும் இனியாய்! | (உனையே) | |
சரணங்கள் | ||
எனை யாள்வாய், வள்ளீ!வள்ளீ! இளமயி லே!என் இதயமலர் வாழ்வே! கனியே!சுவையுறு தேனே! கலவியி லேஅமு தனையாய்!-(கலவியிலே) தனியே,ஞான விழியாய்!நிலவினில் நினைமருவி, வள்ளீ!வள்ளீ! நீயா கிடவே வந்தேன். | (உனையே) |