23 முறை திருமணம் செய்துள்ள 108 வயது பாட்டி


 மலேசியாவில் 23 முறை திருமணம் செய்துள்ள 108 வயது பாட்டிக்கு தற்போது 38 வயதில் இளம் கணவர் இருக்கிறார். இவர்கள் இருவரும் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிட்டுள்ளனர். வயதான ஆண்கள், இளம்பெண்களை திருமணம்
செய்து கொள்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
 
ஆனால் மலேசியாவில் 103 வயதான பாட்டி 33 வயது இளைஞர் ஒருவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடித்து புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். அவரது பெயர் வூக் குந்தர். இது இவருக்கு 23வது திருமணம் ஆகும். கணவர் பெயர் முகமது நூர் சே மூசா. இந்த விநோத தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. இந்த விரக்தியில் நூர், போதை மருந்துக்கு அடிமையானார்.
 
மறுவாழ்வு நிலையத்தில் சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்து திரும்பியுள்ளார். குழந்தை ஏக்கத்தில் உள்ள தம்பதியினர், ஏதாவது ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிட்டுள்ளனர். வூக் குந்தர் பெரிய பணக்காரியும் அல்ல. வேலைக்கு சென்று சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலைதான் முகமது நூருக்கு உள்ளது.