அகத் தூய்மை
நம்முடைய பாவ மூட்டைகளைக் கரைக்க புனித தீர்த்தங்களில் நீராடி வருவோம, புண்ணிய ஷேத்திரங்கள் சென்று தரிசனம் பண்ணுவோம்.
பாகற்காயை எந்த நதியில் கழுவி எடுத்தாலும், அதன் சுவை மாறது, என்பது போலவே நம்முடைய இயல்பும் அப்படித்தான். நம் உள்ளம் தூய்மை அடையாமல் எங்கு சென்று எது செய்தாலும் பலன் தரப் போவதில்லை.
உள்ளம் மாசற்றதாயின் இறைவன் அங்கே விரும்பி வந்து வீற்றிருப்பான்.
சித்தர்கள் சொல்லுவதும் உளத்தூய்மையையே,
"வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு".
என்று வள்ளுவர் உரைத்ததும்...
"மனமது செம்மையானால்
மந்திரம் செபிக்க வேண்டா"
என்று திருமூலர் உரைத்ததும்...
"சித்தத் தலம் போல தெய்வம் இருக்கின்ற
சுத்தத் தலங்களுண்டோ? குதம்பாய்
சுத்தத் தலங்களுண்டோ?"
என்று குதம்பைச் சித்தர் உரைத்ததும் அகத் தூய்மையைத்தானே..?