உரோம ரிஷி

                   உரோம ரிஷி

"கால் வட்டம் தங்கி மதி அமுதப் பாலைக்
கண்டு பசியாற்றி மண் சுவடு நீக்கி
ஞால வட்டம் சித்தாடும் பெரியோர் பதம்
நம்பினதால் உரோமன் என்பேர் நாயன் தானே "


- உரோம ரிஷி -

இவர் செம்படவ தந்தைக்கும், குறத்தாய்க்கும் பிறந்ததாக போகர் தனது நூலில் குறிப்பிடுகிறார். இவர் புசுண்ட முனிவரின் சீடராவார்.

போகர் சீனதேசத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததுபோல, இவர் உரோமாபுரியுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார் இதனால் உரோம ரிஷி என்று அழைக்கப் பட்டார்.

இவர் கும்பகோணதிட்கு அருகிலுள்ள கூந்தலூர் என்னுமிடத்தில் தங்கியிருந்த பொது தாடி வழியாக பொன் வரவழைத்து கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

"உரோம ரிஷி ஞானம் " என்ற பெயரில் இவர் எழுதிய நூலில் மொத்தமாக பதின்மூன்று பாடல்களே இடம் பெற்றிருக்கின்றன.

வகார சூதிரம்
நாகாரூடம்
சிங்கி வைப்பு
உரோம ரிஷி வைத்தியம் 1000
உரோம ரிஷி சோதிட விளாக்கம்
உரோம ரிஷி காவியம் 500
உரோம ரிஷி குறுநூல் 50
உரோம ரிஷி முப்பு சூத்திரம் 30
உரோம ரிஷி இரண்டடி 500
உரோம ரிஷி பெரு நூல் 500
உரோம ரிஷி ஞானம்
உரோம ரிஷி பூஜா விதி
உரோம ரிஷி வைத்திய சூத்திரம்

உரோமரிஷி பஞ்சபட்சி சாத்திரம்

ஆகிய நூல்களை இவர் எழுதியதாக சொல்லப் படுகிறது.

இவர் திருக்கயிலையில் சமாதியடைந்ததாக சொல்லப் படுகின்றது