பாதிரியார் எழுதிய காமசூத்ரா
போலந்தில் இன்று அமோகமாக விற்பனையாவது, கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் எழுதிய உடலுறவு செயல்முறை விளக்க கைநூல். கத்தோலிக்க கிறிஸ்தவம் நீண்ட காலமாக பாலியலை விலக்கப்பட்ட பேசுபொருளாக வைத்திருந்தது. அந்தக் கட்டுப்பாடுகளை தகர்த்துள்ளது "கத்தோலிக்க காமசூத்ரா" என அழைக்கப்படும் இந்த நூல். "இந்த நூலை எழுதுவதற்கு உதவிய தரவுகள் ஏற்கனவே பைபிளில் இருந்துள்ளன." இவ்வாறு பாதிரியார் Ksawery Knotz தெரிவித்தார்.