"களங்கமறப் பொதுநடம் நான் கண்டு கொண்ட தருணம்" என்று பாடிய பாட்டைத் திரித்துப் பாடியது
- களக்கமுறும் மார்லிநடம் கண்ண்டுகொண்ட தருணம்
- கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்
- விளக்கமுறப் பழுத்திடுமோ? வெம்பிவிழுந் திடுமோ?
- வெம்பாது விழினுமென்றன் கரத்திலகப் படுமோ?
- வளர்த்தபழம் கர்சா னென்ற குரங்குகவர்ந் திடுமோ?
- மற்றிங்ஙன் ஆட்சிசெய்யும் அணில்கடித்து விடுமோ?
- துளக்கமற யான்பெற்றிங் குண்ணுவனோ அல்லால்
- தொண்டவிக்குமோ, ஏதும் சொல்லறிய தாமோ?
|