ராகம்-ஹிந்துஸ்தான் தோடி தாளம்-ஏகதாளம் எங்கிருந்து வருகுவதோ?-ஒலி யாவர் செய்குவ தோ?-அடி தோழி! குன்றி னின்றும் வருகுவதோ?-மரக் கொம்பி னின்றும் வருகுவதோ?-வெளி மன்றி னின்று வருகுவதோ?-என்தன் மதி மருண்டிடச் செய்குதடி-இஃது, (எங்கிருந்து) அலையொ லித்திடும் தெய்வ-யமுனை யாறி னின்றும் ஒலுப்பதுவோ?-அன்றி இலையொ லிகும் பொழிலிடை நின்றும் எழுவதோ இஃதின்ன முதைப்போல்? (எங்கிருந்து) காட்டி னின்றும் வருகுவதோ?-நிலாக் காற்றிக் கொண்டு தருகுவதோ?-வெளி நாட்டி னின்றுமித் தென்றல் கொணர்வதோ? நாதமிஃதென் உயிரை யுருக்குதே! (எங்கிருந்து) பறவை யேதுமொன் றுள்ளதுவோ!-இங்ஙன் பாடுமோ அமுதக்கனற் பாட்டு? மறைவினிறுங் கின்னர ராதியர் வாத்தியதினிசை யிதுவோ அடி! (எங்கிருந்து) கண்ண னூதிடும் வேய்ங்குழல தானடீ! காதி லேயமு துள்ளத்தில் நஞ்சு, பண்ணன் றாமடி பாவையர் வாடப் பாடி யெய்திடும் அம்படி தோழி! (எங்கிருந்து) |