ராகம்-ஆனந்த பைரவி தாளம்-ஆதிபச்சைக் குழந்தை யடி!-கண்ணிற் பாவை யடி சந்திரமதி! இச்சைக் கினிய மது!;-என்தன் இருவிழிக்குத் தே நிலவு; நச்சுத்தலைப் பாம்புக் குள்ளே-நல்ல நாகமணி யுள்ளதென்பார்; துச்சப்படு நெஞ்சி லே-நின்தன் சோதி வளரு தடீ! பேச்சுக் கிடமே தடி!-நீ பெண்குலத்தின் வெற்றி யடி! ஆச்சர்ய மாயை யடி!-என்தன் ஆசைக் குமாரி யடி! நீச்சு நிலை கடந்த-வெள்ள நீருக் குள்ளே வீழ்ந்தவர்போல், தீச்சுடரை வென்ற வொளி-கொண்ட தேவி!நினை விழந்தேனடி! நீலக் கடலினிலே-நின்தன் நீண்ட குழல் தோன்றுதடி! கோல மதியினி லே-நின்தன் குளிர்ந்த முகங் காணுதடி! ஞால வெளியினி லே-நின்தன் ஞான வொளி வீசுதடி! கால நடையினி லே-நின்தன் காதல் விளங்குதடி! (பச்சைக் குழந்தை யடி!) |