ஹரிகாம்போதி ஜன்யம்
ராகம் - ஸைந்தவி தாளம் - திஸ்ரசாப்பு
பல்லவி
- கரும்புத் தோட்டத்திலே - ஆ!
- கரும்புத் தோட்டத்திலே
ராகம் - ஸைந்தவி தாளம் - திஸ்ரசாப்பு
பல்லவி
- கரும்புத் தோட்டத்திலே - ஆ!
- கரும்புத் தோட்டத்திலே
- கரும்புத் தோட்டத்திலே - அவர்
- கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
- வருந்து கின்றனரே! ஹிந்து
- மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்துமெய்
- சுருங்குகின்றனரே - அவர்
- துன்பத்தை நீக்க வழியில்லையோ? ஒரு
- மருந்திதற் கிலையோ? - செக்கு
- மாடுகள் போலுழைத் தேங்குகின்றார், அந்தக் (கரும்புத்தோட்டத்திலே)
- பெண்ணென்று சொல்லிடிலோ - ஒரு
- பேயும் இரங்கும் என்பார்; தெய்வமே! - நினது
- எண்ணம் இரங்காதோ? - அந்த
- ஏழைகள் அங்கு சொரியுங் கண்ணீர்வெறும்
- மண்ணிற் கலந்திடுமோ? - தெற்கு
- மாகடலுக்கு நடுவினிலே, அங்கோர்
- கண்ணற்ற தீவினிலே - தனிக்
- காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார், அந்தக் (கரும்புத்தோட்டத்திலே)
- நாட்டை நினைப்பாரோ? - எந்த
- நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை
- வீட்டை நினைப்பாரோ? - அவர்
- விம்மி விம்மி விம்மி விம்மியழுங் குரல்
- கேட்டிருப்பாய் காற்றே! துன்பக்
- கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல்
- மீட்டும் உரையாயோ? - அவர்
- விம்மி யழவுந் திறங்கெட்டும் போயினர் (கரும்புத்தோட்டத்திலே)
- நெஞ்சம் குமுறுகிறார் - கற்பு
- நீங்கிடச் செய்யும் கொடுமையிலே அந்தப்
- பஞ்சை மகளிரெல்லாம் - துன்பப்
- பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு
- தஞ்சமு மில்லாதே - அவர்
- சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில்
- மிஞ்ச விடலாமோ? - ஹே
- வீரமா காளி சாமுண்டி காளீஸ்வரி! (கரும்புத்தோட்டத்திலே)
- கரும்புத் தோட்டத்திலே - அவர்
- கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
- வருந்து கின்றனரே! ஹிந்து
- மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்துமெய்
- சுருங்குகின்றனரே - அவர்
- துன்பத்தை நீக்க வழியில்லையோ? ஒரு
- மருந்திதற் கிலையோ? - செக்கு
- மாடுகள் போலுழைத் தேங்குகின்றார், அந்தக் (கரும்புத்தோட்டத்திலே)
- பெண்ணென்று சொல்லிடிலோ - ஒரு
- பேயும் இரங்கும் என்பார்; தெய்வமே! - நினது
- எண்ணம் இரங்காதோ? - அந்த
- ஏழைகள் அங்கு சொரியுங் கண்ணீர்வெறும்
- மண்ணிற் கலந்திடுமோ? - தெற்கு
- மாகடலுக்கு நடுவினிலே, அங்கோர்
- கண்ணற்ற தீவினிலே - தனிக்
- காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார், அந்தக் (கரும்புத்தோட்டத்திலே)
- நாட்டை நினைப்பாரோ? - எந்த
- நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை
- வீட்டை நினைப்பாரோ? - அவர்
- விம்மி விம்மி விம்மி விம்மியழுங் குரல்
- கேட்டிருப்பாய் காற்றே! துன்பக்
- கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல்
- மீட்டும் உரையாயோ? - அவர்
- விம்மி யழவுந் திறங்கெட்டும் போயினர் (கரும்புத்தோட்டத்திலே)
- நெஞ்சம் குமுறுகிறார் - கற்பு
- நீங்கிடச் செய்யும் கொடுமையிலே அந்தப்
- பஞ்சை மகளிரெல்லாம் - துன்பப்
- பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு
- தஞ்சமு மில்லாதே - அவர்
- சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில்
- மிஞ்ச விடலாமோ? - ஹே
- வீரமா காளி சாமுண்டி காளீஸ்வரி! (கரும்புத்தோட்டத்திலே)